செய்திகள்,திரையுலகம் மனைவியைப் பிரிந்தாரா நடிகர் சந்தானம்?…

மனைவியைப் பிரிந்தாரா நடிகர் சந்தானம்?…

மனைவியைப் பிரிந்தாரா நடிகர் சந்தானம்?… post thumbnail image
சென்னை:-நடிகர் சந்தானம் நடித்து விரைவில் வெளியாக இருக்கும் படம் ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ இனி ஹீரோவாக மட்டுமே நடிப்பது என்று முடிவு செய்துவிட்டார் சந்தானம். அதுமட்டுமல்ல, தன் படக்கம்பெனி மூலம் தொடர்ந்து படங்களை தயாரிப்பது என்ற முடிவுக்கும் வந்திருக்கிறார்.

இப்படிப்பட்ட சூழலில் சந்தானம் பற்றி படத்துறையில் பரபரப்பான தகவல் ஒன்று அடிபடுகிறது. மனைவியைப் பிரிந்து சந்தானம் தனியாக வசிக்கிறார் என்பதே அந்த தகவல். சினிமாவில் பிரபலமாவதற்கு முன்பே சந்தானம் திருமணமானவர். இரண்டு குழந்தைகளும் உண்டு.

சென்னையின் புறநகரான பொழிச்சலூரில் குடும்பத்துடன் வசித்து வந்த சந்தானம், மனைவியுடன் பிரச்சனை ஏற்பட்டதால் கடந்த சில வாரங்களாக சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது அலுவலகத்திலேயே தங்கி வருகிறாராம். அதுமட்டுமல்ல, அதே பகுதியில் ஒரு ப்ளாட்டை வாங்கியிருக்கும் சந்தானம் விரைவில் அந்த ப்ளாட்டில் தனியாக குடியேற இருக்கிறாராம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி