செய்திகள் பாகிஸ்தானில் நூலகத்திற்கு பின்லேடன் பெயர்!…

பாகிஸ்தானில் நூலகத்திற்கு பின்லேடன் பெயர்!…

பாகிஸ்தானில் நூலகத்திற்கு பின்லேடன் பெயர்!… post thumbnail image
இஸ்லாமாபாத்:-பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள செம்மசூதியில் பிரார்த்தனை குருவாக மௌலானா அப்துல் அசிஸ் என்பவர் பணியாற்றி வருகின்றார். போராளிகள் பதுங்குமிடமாக இருந்த இந்த மசூதி கடந்த 2007-ம் ஆண்டில் ராணுவத்தினரின் தாக்குதலுக்கு உள்ளானது. அப்போது பனிரெண்டுக்கும் மேற்பட்டோர் அங்கு கொல்லப்பட்டதால் நாடு முழுவதும் போராளிகளின் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன.

இந்த மசூதி மூலம் இரண்டு பாடசாலைகள் நடைபெற்று வருகின்றன. ஒன்றில் ஆண்களும், மற்றொன்றில் பெண்களும் கல்வி பயின்று வருகின்றனர். 15,000 பெண்கள் பயிலும் பள்ளியில் பெண் ஆசிரியைகளே பணிபுரிந்து வருகின்றனர். இதனையும் சர்ச்சைக்குரிய மௌலானா அப்துல் அசிசே நிர்வகித்து வருகின்றார்.இவர் பெண்கள் பள்ளியில் அமைந்துள்ள நூலகத்திற்கு கடந்த 2011-ம் ஆண்டில் அமெரிக்க ராணுவத்தால் கொல்லப்பட்ட மறைந்த அல் கொய்தா இயக்கத்தின் தலைவரான ஒசாமா பின்லேடனின் பெயரை வைத்துள்ளார்.

இந்தத் தகவலை இன்று வெளியிட்ட அவரது தகவல் தொடர்பாளரான டெசின் உல்லா இஸ்லாமிய மதத்திற்காக உயிரை விட்ட ஒரு தியாகியாக ஒசாமாவை அசிஸ் கருதுகின்றார். அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாகவே இந்த நூலகத்திற்கு அவரது பெயரை வைத்துள்ளார் என்று தெரிவித்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி