அரசியல்,செய்திகள் பிரேமலதா விஜயகாந்த் மீது வழக்கு பதிவு!…

பிரேமலதா விஜயகாந்த் மீது வழக்கு பதிவு!…

பிரேமலதா விஜயகாந்த் மீது வழக்கு பதிவு!… post thumbnail image
கோபி:-திருப்பூர் தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் தினேஷ்குமாரை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம் செய்தார். கோபி பஸ் நிலையத்தில் கடந்த 14ம் தேதி தே.மு.தி.கவை ஆதரித்து அவர் வாக்குகள் சேகரித்தார்.

அப்போது பிரேமலதா பேசும் போது, அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலத்தை பற்றி அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதைதொடர்ந்து அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலத்தை அவதூறாக பேசிய பிரேமலதா விஜயகாந்த் மற்றும் காஞ்சிகோவிலை சேர்ந்த கிட்டு என்கிற கிட்டுசாமி ஆகியோர் மீது கோபி நகர அ.தி.மு.க. செயலாளர் சையத் புடான்சா கோபி போலீசில் புகார் செய்தார்.அதன்பேரில் கோபி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் வழக்கு பதிவு செய்துள்ளார்.

.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி