செய்திகள் ஏ.சி. பஸ் தீப்பிடித்து 6 பயணிகள் பலி!…

ஏ.சி. பஸ் தீப்பிடித்து 6 பயணிகள் பலி!…

ஏ.சி. பஸ் தீப்பிடித்து 6 பயணிகள் பலி!… post thumbnail image
பெங்களூர்:-கர்நாடகா மாநிலம் தவன்கெரேவில் இருந்து பெங்களூருக்கு நேற்றிரவு ஒரு ஆம்னி பஸ் புறப்பட்டு வந்தது. தனியாருக்கு சொந்தமான அந்த குளிர்சாதன நவீன சொகுசு பஸ்சில் 29 பயணிகள் இருந்தனர்.இன்று அதிகாலை அந்த பஸ் சித்ரதுர்கா அருகில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக டீசல் டேங்கில் கசிவு ஏற்பட்டது. அந்த கசிவால் தீ பற்றிக் கொண்டது.

பஸ் வேகமாக சென்று கொண்டிருந்ததால், பலத்த காற்றில் தீ பரவியது. மறு நிமிடம் டீசல் டேங்க் வெடித்தது. இதனால் பஸ் முழுவதும் தீ பிடித்து கொண்டது.
பஸ்சில் தீ பிடித்தபோது, பயணிகளில் பெரும்பாலானவர்கள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர். தீ பரவியதை தொடர்ந்து பயணிகள் அலறினார்கள். உடனே டிரைவர் பஸ்சை நிறுத்தினார். பஸ் கதவை திறந்து பயணிகளை வெளியேற கூறினார்கள்.

11 பயணிகள் அதிர்ஷ்டவசமாக வெளியில் தப்பி வந்துவிட்டனர். 18 பயணிகள் மட்டும் பஸ் உள்ளே சிக்கிக் கொண்டனர். அவர்களில் 6 பேர் பஸ் உள்ளே சிக்கி தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.மீதமுள்ள 12 பயணிகள் தீ பிடித்த நிலையில் மீட்கப்பட்டனர். அவர்கள் படுகாயங்களுடன் தவித்தனர்.இதற்கிடையே சொகுசு பஸ்சில் தீ பிடித்த தகவல் அறிந்த போலீசாரும், தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் 12 பயணிகளையும் தவன்கெரேயில் உள்ள மருத்துவமனைகளுக்கு அழைத்து சென்றனர். அங்கு 12 பயணிகளுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி