செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்றார் இந்திய வீரர் மானவ்ஜித்!…

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்றார் இந்திய வீரர் மானவ்ஜித்!…

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்றார் இந்திய வீரர் மானவ்ஜித்!… post thumbnail image
டக்சன்:-சர்வதேச துப்பாக்கி சுடுதல் சம்மேளனம் சார்பில் ஷாட்கன் உலகக்கோப்பை போட்டி அமெரிக்காவின் டக்சன் நகரில் நடைபெற்றது. இதில், ஆடவருக்கான டிராப் பிரிவில் இந்திய வீரர் மானவ்ஜித் சிங் சந்து, இரண்டு முறை ஒலிம்பிக் சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலிய வீரர் மிக்கேல் டயமண்டை வீழ்த்தி சாம்பியன் ஆனார்.

தகுதிச்சுற்றில் 121 புள்ளிகளும் இறுதிச்சுற்றில் 13 புள்ளிகளும் பெற்ற மானவ்ஜித் சிங் சந்து தங்கப்பதக்கம் வென்றார். தகுதிச்சுற்றில் 119 புள்ளிகளும் இறுதிச்சுற்றில் 9 புள்ளிகளும் பெற்ற மிக்கேல் டயமண்ட் வெள்ளிப் பதக்கமும், ரஷ்ய வீரர் அலெக்சி அலிபோவ் வெண்கலப் பதக்கமும் (121+12) வென்றனர்.உலகின் முன்னணி வீரர்கள் பங்கேற்ற இப்போட்டியில், அயர்லாந்து வீரர் டெரிக் பர்னெட் தகுதிச்சுற்றில் 123 புள்ளிகளைக் குவித்து முதலிடத்தை பிடித்தபோதிலும், அரையிறுதியில் கோட்டைவிட்டார்.

இந்தியாவின் சிறந்த ஷாட்கன் வீரர்களில் ஒருவரான மானவ்ஜித், கடந்த மாதம் பாட்டியாலா கோப்பையை வென்றார். 2012ல் லண்டனில் நடந்த ஒலிம்பிக்கில் பங்கேற்ற இவர் தகுதிச்சுற்றில் 16-வது இடத்தில் வந்ததால் இறுதிச்சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி