செய்திகள்,திரையுலகம் சிம்பு,செல்வராகவன் படத்தின் ஷூட்டிங் ஏப்ரல் 25ல் தொடக்கம்!…

சிம்பு,செல்வராகவன் படத்தின் ஷூட்டிங் ஏப்ரல் 25ல் தொடக்கம்!…

சிம்பு,செல்வராகவன் படத்தின் ஷூட்டிங் ஏப்ரல் 25ல் தொடக்கம்!… post thumbnail image
சென்னை:-இரண்டாம் உலகம்’ படத்திற்குப் பிறகு செல்வராகவன் இயக்கும் புதிய படத்தில் சிம்பு,த்ரிஷா நடிக்கின்றனர். ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ வெற்றிக்குப் பிறகு மீண்டும் இந்த ஜோடி இணைவதால் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கு செல்வராகவனின் ஃபேவரைட் இசையமைப்பாளர், யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ரேடியன்ஸ் மீடியா சார்பில் வருண் மணியன் இப்படத்தைத் தயாரிக்கிறார்.

காதல் கதையாக உருவாகவிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 25ம் தேதி துவங்குகிறது. சிம்பு, த்ரிஷா ஜோடி, மீண்டும் யுவனுடன் கூட்டணி என ரசிகர்களைக் கவரும் நிறைய விஷயங்கள் இருப்பதால் படத்தைப் பற்றிய பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி