செய்திகள்,திரையுலகம் காமெடி படங்கள் எடுப்பது கஷ்டம் என கூறும் பிரபல இயக்குனர்!…

காமெடி படங்கள் எடுப்பது கஷ்டம் என கூறும் பிரபல இயக்குனர்!…

காமெடி படங்கள் எடுப்பது கஷ்டம் என கூறும் பிரபல இயக்குனர்!… post thumbnail image
சென்னை:-சிவகார்த்தியேன் ஹன்சிகா ஜோடியாக நடித்த மான்கராத்தே படம் ரிலீசாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. இப்படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சி வடபழனியில் நடந்தது. இதில் டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் பங்கேற்று பேசியதாவது:–

இந்த படத்தின் கதையை நான் எழுதி என்னிடம் உதவி இயக்குனராக பணியாற்றும் திருக்குமாரை டைரக்டு செய்ய வைத்தேன். காமெடி கதையம்சத்தில் வந்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் படம் வெற்றிகரமாக ஓடுகிறது. குழந்தைகளுடன் குடும்பம் குடும்பமாக பார்க்கிறார்கள்.சிவகார்த்திகேயனை வைத்து சீரியஸ் படம் பண்ண முடியாது. இந்த படத்தின் கேரக்டருக்கு அவர் பொருத்தமாக இருந்தார். திறமையான புதுடெக்னீஷியன்களை அறிமுகப்படுத்தவே படங்கள் எடுக்கிறேன். எனக்கு பணம் இரண்டாம் பட்சம்தான். நல்ல வழிகாட்டல் இல்லாமல் வளர்ந்த இளைஞன் ஒருவனுக்கு திடீர் என ஜெயிக்க வேண்டும் என்ற வெறி ஏற்படுகிறது. அது நிறைவேறியதா என்பதுதான் படத்தின் கதை. ஆக்ஷன் படங்களை விட காமெடி படங்கள் எடுப்பது ரொம்ப கஷ்டம்.இவ்வாறு அவர் பேசினார்.

சிவகார்த்தியேன் பேசும் போது, மான்கராத்தே படம் வெளியான சில தினங்களிலேயே பெரிய தொகை வசூலித்து வினியோகஸ்தர்களையும் தியேட்டர்காரர்களையும் சந்தோஷப்படுத்தி உள்ளது. நிறைய பாராட்டுகளும் குவிகிறது.
இப்போதெல்லாம் ஒரு படத்தின் லைப் இரண்டு வாரம் தான். 3 நாட்களில் அதன் வசூல், வெற்றி தோல்வியை நிர்ணயம் செய்து விடுகிறது. காமெடி படங்களில் நடிப்பது கஷ்டமானது என்றார்.நடிகை ஹன்சிகா டைரக்டர் திருக்குமரன், தயாரிப்பாளர் மதன், இசையமைப்பாளர். அனிருத், ஒளிப்பதிவாளர் சுகுமார் ஆகியோரும் பங்கேற்று பேசினார்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி