அரசியல்,செய்திகள் ‘துரோகம் செய்தவர்களை கொல்லுங்கள்’ ராஜ் தாக்கரே பேச்சால் பரபரப்பு!…

‘துரோகம் செய்தவர்களை கொல்லுங்கள்’ ராஜ் தாக்கரே பேச்சால் பரபரப்பு!…

‘துரோகம் செய்தவர்களை கொல்லுங்கள்’ ராஜ் தாக்கரே பேச்சால் பரபரப்பு!… post thumbnail image
மும்பை:-விதார்பா பகுதியில் மராட்டிய நவநிர்மாண் கட்சியின் வேட்பாளர் ராஜூ பாட்டீல் ரஜேவை ஆதரித்து மராட்டிய நவநிர்மாண் கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே பிரசாரம் செய்தார். அப்போது, சாலைகள், குடிநீர் மற்றும் வேலை வாய்ப்பு போன்ற அடிப்படை தேவைகளுக்காக கடந்த 67 ஆண்டுகளாக தேர்தலில் போராடி வருகிறோம்.

ஆனால் இந்த பிரச்சனைகள் தொடர்ந்து இங்கு உள்ளது. இந்நிலையில் மக்கள் தேர்தல் வேண்டாம் என்ற நிலைக்கு வந்துள்ளனர். நாட்டில் அனைத்து பகுதிகளிலும் மதுபானங்கள் கிடைக்கின்றன. அப்படியிருக்க குடிநீர் மட்டும் எப்படி கொடுக்கப்படமுடியாது.

கூட்டத்தில் விவசாயிகளின் தற்கொலை குறித்து பேசிய ராஜ்தாக்கரே, விவசாயிகளின் தற்கொலைக்கு தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியே காரணம் என்று குற்றம் சாட்டினார். மேலும், நீங்கள் தற்கொலை செய்து கொள்ளாதீர்கள் உங்களுக்கு அநீதி அளித்தவர்களை கொல்லுங்கள் என்று பேசினார். இது மிகவும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி