சென்னை:-கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிக்க போகும் படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 9ம் தேதி தொடங்கவுள்ளது.இந்த படத்தில் நாயகியாக அனுஷ்கா நடிக்கவுள்ளார். ஆனால் தற்போது திரிஷாவும் இந்த படத்தில் நாயகியாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
கௌதம் மேனன் திரிஷாவிடம் இந்த படத்தில் நடிக்க கேட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.இந்த படம் ஆக்ஷன் கலந்த திரில்லர் படம் என்பதால், இரண்டு நாயகிகள் நடிக்க வாய்ப்புள்ளதாம்.
திரிஷாவும், கௌதம் மேனனும் இதற்கு முன் விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் பணிபுரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.எனினும் திரிஷா இந்த படத்தில் நடிப்பதை பற்றி இன்னும் அதிகாரப் பூர்வமான தகவல் வெளிவரவில்லை.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி