அரசியல்,செய்திகள் ஜெயலலிதா பிரதமரானால் தீவிரவாதத்தை ஒழிக்க முடியும்!… மதுரை ஆதீனம்…

ஜெயலலிதா பிரதமரானால் தீவிரவாதத்தை ஒழிக்க முடியும்!… மதுரை ஆதீனம்…

ஜெயலலிதா பிரதமரானால் தீவிரவாதத்தை ஒழிக்க முடியும்!… மதுரை ஆதீனம்… post thumbnail image
நாகர்கோவில்:-கன்னியாகுமரி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஜான்தங்கத்தை ஆதரித்து நாகர்கோவில் வடிவீஸ்வரத்தில் பொதுக் கூட்டம் நடந்தது.கூட்டத்தில், மதுரை ஆதீனம் பேசியதாவது:–இந்திய நாட்டை வல்லரசாக்க ஜெயலலிதாவால் தான் முடியும். புனித ஜார்ஜ் கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயிலை எம்.ஜி.ஆர். 3 முறை ஓட்டினார். அதன்பிறகு ஜெயலலிதா 3வது முறையாக ரெயிலை ஓட்டி வருகிறார். 2014 பாராளுமன்ற தேர்தல் முடிந்ததும், ஜெயலலிதா செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயிலை ஓட்டப்போகிறார். அதற்கு பச்சைக்கொடி காட்டப் போகிறவர்கள் தமிழகம் மற்றும் புதுச்சேரி மக்கள்.

அவர் முதல் அமைச்சர் மட்டுமல்ல, நெருப்பாற்றில் நீந்தி வந்த சிங்கம். அவரை விட்டால் உலகத்துக்கு வேறு நாதியே இல்லை. தமிழ், ஆங்கிலம், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி என பன்மொழி பேசும் தலைவி ஆவார். அவரைப் போல் கருணை உள்ளம் படைத்தவரை பார்க்க முடியாது.மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப், பெண்களுக்கு தாலிக்கு தங்கம், விலையில்லா மிக்சி, மின் விசிறி, கிரைண்டர், ஏழைகளுக்கு விலையில்லா ஆடு என பல்வேறு திட்டங்களை தீட்டி செயலாற்றி வருகிறார். நாடு நலம் பெற வேண்டும் என்ற அக்கறையோடு பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அனைத்து துறைகளிலும் தமிழகம் முன்னேற வேண்டும் என்பதற்காக இரவை பகலாக்கி உழைக்கிறார். ஈழத் தமிழர் நல்வாழ்வுக்காக சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றியவர் ஜெயலலிதா.

இந்தியாவில் ஓடும் நதிகளை தேசியமயமாக்க வேண்டும் என்றால் ஜெயலலிதாவால் மட்டுமே முடியும். பயங்கரவாதம், தீவிரவாதம் ஒழிய வேண்டும் என்றால், பெட்ரோல்-டீசல் விலை குறைய வேண்டும் என்றால் ஜெயலலிதா பிரதமராக வேண்டும். அதற்கு தமிழ் நாடு மற்றும் புதுச்சேரி உள்பட 40 பாராளுமன்ற தொகுதிகளில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும்.இவ்வாறு மதுரை ஆதீனம் பேசினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி