ஐதராபாத்:-தெலுங்கில் மிகவும் பிரபலமான நடிகர் என்.டி.ஆர்.பாலகிருஷ்ணா. இவர் முன்னாள் ஆந்திர முதல் என்.டி.ராமாராவின் மகன் ஆவார். தெலுங்கில் பல வெற்றிப்படங்களை கொடுத்து சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்கு உயர்ந்தவர்.
இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஐதராபாத்தில் உள்ள ஜூப்லி ஹில்ஸ் பகுதியில் உள்ள அவருடைய வீட்டில் ஆழ்குழாய் கிணறு ஒன்று மாநகராட்சியின் அனுமதியின்றி போட்டுள்ளார். இதுகுறித்து தகவல் தெரிந்தவுடன் அவருடைய வீட்டை சோதனை செய்த மாநகராட்சி அதிகாரிகள், சட்டத்தை மீறி அனுமதியின்றி ஆழ்குழாய் கிணறு போட்டதற்காக அவருக்கு ரூ.10,000 அபராதம் விதித்தனர். அபராதத்தொகையை உடனடியாக அதிகாரிகளிடம் பாலகிருஷ்ணா கட்டிவிட்டார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி