அரசியல்,செய்திகள் அழகிரி, ப.சிதம்பரம் சந்திப்பு!…

அழகிரி, ப.சிதம்பரம் சந்திப்பு!…

அழகிரி, ப.சிதம்பரம் சந்திப்பு!… post thumbnail image
மதுரை:-தி.மு.க.வின் தென்மண்டல முன்னாள் அமைப்பு செயலாளர் மு.க.அழகிரி, சென்னையில் தனது தாய் தயாளு அம்மாள், சகோதரி கனிமொழி ஆகியோரை சந்தித்து விட்டு, நேற்று விமானம் மூலம் மதுரை புறப்பட்டார்.

அதே விமானத்தில் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம், அவரது மகனும், சிவகங்கை பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் கார்த்தி ப.சிதம்பரம் ஆகியோரும் மதுரை புறப்பட்டனர். ஒரே விமானத்தில் வந்த அவர்கள், முதலில் பரஸ்பர நலம் விசாரித்துக் கொண்டனர்.மதுரை விமான நிலையம் வந்ததும் மு.க.அழகிரியுடன், ப.சிதம்பரம் சிறிது நேரம் தனியாக ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் இருவரும் விடைபெற்று தங்கள் ஆதரவாளர்களுடன் சென்று விட்டனர்.

இந்த சந்திப்பின்போது கார்த்தி ப.சிதம்பரத்திற்கு ஆதரவு அளிக்கும்படி, ப.சிதம்பரம் கேட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. இதன் மூலம் சிவகங்கை தொகுதியில் மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள், காங்கிரசுக்கு ஆதரவு கொடுப்பார்கள் என கூறப்படுகிறது. இதனால் ப.சிதம்பரம்–மு.க.அழகிரி சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.இந்த சந்திப்பு குறித்து மு.க.அழகிரி கூறுகையில், மத்திய அரசில் இருவரும் அமைச்சர்களாக பணிபுரிந்தோம். அந்த நினைவுகளை பகிர்ந்து கொண்டோம். அரசியல் பேசவில்லை என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி