செய்திகள்,திரையுலகம் ஹரியின் இரவு நேர பூஜையில் விஷால்-ஸ்ருதிஹாசன்!…

ஹரியின் இரவு நேர பூஜையில் விஷால்-ஸ்ருதிஹாசன்!…

ஹரியின் இரவு நேர பூஜையில் விஷால்-ஸ்ருதிஹாசன்!… post thumbnail image
சென்னை:-விஷால் தற்போது தனது சொந்த தயாரிப்பில் ‘நான் சிகப்பு மனிதன்‘ படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து விஷால் இயக்குனர் ஹரியின் இயக்கத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார். இந்த படத்தையும் விஷால் தனது சொந்த நிறுவனம் மூலமே தயாரிக்க உள்ளார்.

தாமிரபரணி படத்திற்கு பின்னர் மீண்டும் இணையும் ஹரி-விஷால் படத்திற்கு ‘பூஜை‘ என பெயரிடப்பட்டுள்ளது. பூஜையின் பூஜை வரும் ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் சென்னையில் நடக்கவுள்ளது.இந்த படத்தின் கதைப்படி பெரும்பாலான படப்பிடிப்புகள் இரவு நேரத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு கிராமத்தில் இரவு நேரங்களில் நடக்கும் தொடர் கொலையை கண்டுபிடிக்கும் துப்பறியும் அதிகாரியாக விஷால் இந்த படத்தில் நடிக்கிறார். அவருடைய உதவியாளராக ஸ்ருதிஹாசன் நடிக்க உள்ளார். விஷால்-ஸ்ருதிஹாசன் சம்மந்தப்பட்ட காட்சிகளில் பெரும்பாலானவை இருட்டில் எடுக்கப்பட உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.

தொடர்ச்சியாக இரவு நேரத்தில் படப்பிடிப்பு நடக்கவுள்ளதால் இந்த படத்தில் பணிபுரியும் தொழில்நுட்ப கலைஞர்கள் இரட்டைச்சம்பளம் கேட்டுள்ளனர். இதனால் இயக்குனர் ஹரி மற்றும் அதிர்ச்சி அடைந்துள்ளார். ஆனாலும் வேறு வழியில்லாமல் அவர்களுடைய கோரிக்கைக்கு ஒப்புக்கொண்டனர்.பூஜை படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இவர் ஏற்கனவே ஹரியின் ‘தாமிரபரணி’ படத்திற்கு இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் முக்கிய வேடங்களில் சத்யராஜ் மற்றும் முகேஷ் திவாரி நடிக்கின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி