செய்திகள்,திரையுலகம் முதல் முறையாக இனைந்து நடிக்கும் விஜய், தனுஷ், சூர்யா!…

முதல் முறையாக இனைந்து நடிக்கும் விஜய், தனுஷ், சூர்யா!…

முதல் முறையாக இனைந்து நடிக்கும் விஜய், தனுஷ், சூர்யா!… post thumbnail image
சென்னை:-புதுமுகங்களை நடிக்கவைத்து பார்த்திபன் இயக்கிக்கொண்டிருக்கும் படம் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்‘. முதல் முறையாக இப்படத்தில் நடிக்காமல் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் பார்த்திபன்.

ஆனால், கதையே இல்லாமல் ஒரு படம் என்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருக்கிறார். மேலும் இப்படத்தில் ஆர்யா, அமலாபால், நஸ்ரியா, விஜய் சேதுபதி ஆகியோர் கெஸ்ட் ரோலில் நடிக்கின்றர் என்ற தகவல் ஏற்கனவே வெளியாகியிருந்தது.

தற்போது, இவர்களுடன் சேர்த்து விஜய், தனுஷ், சூர்யா ஆகியோரும் இப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கப் போவதாக செய்திகள் வந்திருக்கிறது.ஏராளமான முன்னணி நட்சத்திரங்கள் கெஸ்ட் ரோலில் நடிக்கும் அளவிற்கு என்ன கதையாக இருக்கும் என எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறார் பார்த்திபன்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி