சில நாட்களாக சாஜித் பள்ளிக்கு செல்வதில்லை என்பதையறிந்த மஜீத், நேற்றிரவு கம்பை எடுத்து கண்மூடித்தனமாக அடித்துள்ளார். இதனால், தலையில் பலத்த காயமடைந்த சாஜித் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தான். அக்கம்பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் அவனை ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு தூக்கிச் சென்று சிகிச்சை அளித்தனர்.
தலைக்காயம் பெரியதாக இருந்ததால் முதலுதவி மட்டும் செய்த டாக்டர், மேல் சிகிச்சைக்காக தானே மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்குமாறு பரிந்துரை செய்து அனுப்பி வைத்தனர். அங்கு கொண்டு செல்லும் வழியில் சிறுவன் சாஜித் பரிதாபமாக உயிரிழந்தான்.இச்சம்பவம் பற்றிய தகவல் அறிந்த சிவாஜி நகர் போலீசார் இன்று அதிகாலை அஜீத் மஜீத் கானை கைது செய்து, அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி