அரசியல்,செய்திகள் ஜெயலலிதாவை பாராட்டிய அழகிரி!…

ஜெயலலிதாவை பாராட்டிய அழகிரி!…

ஜெயலலிதாவை பாராட்டிய அழகிரி!… post thumbnail image
மதுரை:-மதுரையில் தனது ஆதரவாளர்களை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் அழகிரி பேசினார்.அப்போது அவர் பேசியதாவது, எங்களின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினேன், பலரும் அவர்களின் கருத்துக்களையும், யோசனைகளையும் தெரிவித்துள்ளனர்.

என்னை பொறுத்த வரை கருணாநிதி தான் எப்போதும் திமுகவின் தலைவர், தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் வேட்பாளர் பட்டியல் அவர் முடிவு செய்த பட்டியல் இல்லை, கட்சிக்கு சம்பந்தம் இல்லாத பலரின் பெயர்களும் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.மாவட்ட செயலாளர்களை வருடத்திற்கு ஒரு முறையாவது மாற்ற வேண்டும், அப்போது தான் கட்சி உருப்படும். அந்த விசயத்தில் ஜெயலலிதாவை நான் பாராட்டுகிறேன்.

மாவட்ட செயலாளர்கள் ஒழுங்காக செயல்படாவிட்டால், உடனே நடவடிக்கை எடுக்கிறார். அந்த கட்டுப்பாடு திமுகவில் இல்லை, மாவட்ட நிர்வாகிகள் அளிக்கும் புகார்கள் கட்சி தலைவரிடமோ அல்லது பொதுச் செயலாளரிடமோ சென்று சேர்வதில்லை. அதற்கென ஒரு அடிமை உள்ளார், அவர் தான் அனைத்து பேக்ஸ்களையும் பெறுகிறார்.மேலும் நமது கட்சி காக்கப்பட வேண்டும் என்ற கொள்கையுடனேயே செயல்பட்டு வருகிறோம், கட்சி தலைமை அழைத்தால் வரும் லோக்சபா தேர்தலுக்காக களத்தில் இறங்கி சுறுசுறுப்பாக பணியாற்றுவோம் என்றும் கட்சி தலைமை அழைக்காவிட்டால் தொடர்ந்து ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஒரு முடிவுக்கு வருவோம் எனவும் கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி