செய்திகள்,விளையாட்டு சங்கக்கராவை தொடர்ந்து ஜெயவர்தனேவும் ஓய்வு அறிவிப்பு…

சங்கக்கராவை தொடர்ந்து ஜெயவர்தனேவும் ஓய்வு அறிவிப்பு…

சங்கக்கராவை தொடர்ந்து ஜெயவர்தனேவும் ஓய்வு அறிவிப்பு… post thumbnail image
டாக்கா:-வங்காளதேசத்தில் நடந்து வரும் 20 ஓவர் உலக கோப்பை முடிந்ததும் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இலங்கை அணியின் விக்கெட் கீப்பர் சங்கக்கரா அறிவித்திருந்தார். சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இருந்து விடை பெற்றாலும், மற்ற வகையான 20 ஓவர் போட்டிகளில் (ஐ.பி.எல். போட்டி உள்ளிட்டவை) விளையாட விரும்புவதாகவும் அவர் கூறியிருந்தார்.

அவரைத் தொடர்ந்து இலங்கையின் முன்னணி வீரர் மகேலா ஜெயவர்தனேயும், உலகக்கோப்பை போட்டிக்குப் பிறகு சர்வதேச 20 ஒவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார்.36 வயதான ஜெயவர்தனே இதுவரை நடைபெற்ற அனைத்து 20 ஓவர் உலகக் கோப்பை தொடரிலும் பங்கேற்றுள்ளார். இந்த உலகக் கோப்பை தொடர் அவர் விளையாடும் கடைசி தொடராகும். கடைசியாக நடந்த உலகக்கோப்பை தொடரில் ஜெயவர்தனே தலைமையிலான இலங்கை அணி, இறுதிப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் தோல்வியடைந்தது.

இதுவரை 49 சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் விளையாடியுள்ள ஜெயவர்தனே 1335 ரன்கள் (சராசரி 31.78) எடுத்துள்ளார். 2010ல் நடந்த உலகக்கோப்பை தொடரின்போது, ஜிம்பாப்வே அணிக்கு எதிராக சதம் அடித்ததே அவரது அதிகபட்ச ரன்னாகும். சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் 8 அரை சதங்களும் அடித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி