செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு தலைமுறையின் சிறந்த கிரிக்கெட் வீரர் விருதைப் பெற்றார் சச்சின்!…

தலைமுறையின் சிறந்த கிரிக்கெட் வீரர் விருதைப் பெற்றார் சச்சின்!…

தலைமுறையின் சிறந்த கிரிக்கெட் வீரர் விருதைப் பெற்றார் சச்சின்!… post thumbnail image
மும்பை:-நேற்று மும்பையில் நடைபெற்ற விழாவில் இந்த தலைமுறைக்கான சிறந்த வீரர் விருதை இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் பெற்றார். இவருடன் இணைந்து இப்பட்டியலில் போட்டியிட்ட ஆஸ்திரேலியாவின் சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வார்னே, தென்னாப்பிரிக்காவின் ஆல்-ரவுண்டர் ஜாக் காலிஸ் ஆகியோரை முந்தி சச்சின் இவ்விருதை பெற்றுள்ளார்.

விருதை பெற்ற பின்னர் சச்சின் கூறுகையில் “என்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இவ்விழாவை ஏற்பாடு செய்த ஈ.எஸ்.பி.என் நிறுவனத்திற்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இப்பட்டியலில் என்னுடன் சேர்த்து இடம்பெற்றிருந்த வார்னேவும் காலிசும் மிகச்சிறந்த வீரர்களாவர்” என்று தெரித்தார்.
தனது பழைய நிகழ்வுகளை நினைவு கூர்ந்த சச்சின் 1992ல் பெர்த் டெஸ்டில் தான் எடுத்த 114 ரன்களை மறக்க முடியாது என்றும் கூறினார்.

சிறந்த ஒருநாள் மற்றும் டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான விருதுகளை முறையே இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஷிகார் தவான் மற்றும் ரோகித் ஷர்மா பெற்றுக்கொண்டனர். சிறந்த ஒருநாள் மற்றும் டெஸ்ட் பந்து வீச்சாளர்களுக்கான விருதை முறையே ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஜான்சனும் பாகிஸ்தானின் அப்ரிடியும் பெற்றுக்கொண்டனர். சிறந்த டெஸ்ட் போட்டி அறிமுக வீரராக இந்தியாவின் முகம்மது சமி தேர்வு செய்யப்பட்டார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி