செய்திகள் பத்மநாபசுவாமி கோயிலுக்குள் சாக்சுடன் சென்ற ஷீலா தீட்சித்தால் பரபரப்பு!…

பத்மநாபசுவாமி கோயிலுக்குள் சாக்சுடன் சென்ற ஷீலா தீட்சித்தால் பரபரப்பு!…

பத்மநாபசுவாமி கோயிலுக்குள் சாக்சுடன் சென்ற ஷீலா தீட்சித்தால் பரபரப்பு!… post thumbnail image
திருவனந்தபுரம்:-கேரள கவர்னராக இருந்த நிகில்குமார் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து புதிய கவர்னராக டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்தை மத்திய அரசு நியமித்தது.

கடந்த 11ம் தேதி அவர் கேரளாவின் 22வது கவர்னராக பதவியேற்றார். ஷீலா தீட்சித் பதவியேற்ற அன்றே அவரை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம் நடத்தினர். இந்நிலையில், ஷீலா தீட்சித் நேற்று புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். நேற்று காலை 7.30 மணியளவில் ஷீலா தீட்சித் திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலுக்கு சாமி கும்பிட சென்றார்.அப்போது அவர் காலில் சாக்ஸ் அணிந்து சென்றதாக கூறப்படுகிறது. இதைப் பார்த்த சில பக்தர்கள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் ஆசார விதிகளின்படி வெறும் கால்களுடன் மட்டுமே கோயிலுக்குள் செல்ல வேண்டும். ஆண்கள் வேட்டி அணிந்தும், பெண்கள் சேலை அணிந்தும் செல்ல வேண்டும். இந்த ஆசார விதிகளை கடைப்பிடிப்பவர்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். இந்நிலையில் கவர்னர் ஷீலா தீட்சித் காலில் சாக்ஸ் அணிந்து கோயிலுக்குள் சென்றது பக்தர்களிடயே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி