செய்திகள்,திரையுலகம் மீண்டும் சமுத்திரக்கனியுடன் சேர்ந்த அமலாபால்!…

மீண்டும் சமுத்திரக்கனியுடன் சேர்ந்த அமலாபால்!…

மீண்டும் சமுத்திரக்கனியுடன் சேர்ந்த அமலாபால்!… post thumbnail image
சென்னை:-இயக்குனர் சமுத்த்திரக்கனி தனது நிமிர்ந்து நில் படத்தின் வெற்றியால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றார். இந்த உற்சாகத்தோடு தனது அடுத்த படத்தின் வேலையை தொடங்கிவிட்டார். நிமிர்ந்துநில் படத்தில் ஜெயம் ரவி இரட்டை வேடங்களில் நடித்திருப்பார். அவருக்கு ஜோடியாக அமலா பால் நடித்துள்ளார்.

தற்போதைய புதிய படத்திலும் அமலாபால்தான் ஹீரோயின். முந்தைய படத்தில் ஜெயம் ரவிக்கு இரட்டை வேடம் கொடுத்த சமுத்திரக்கனி, இந்த படத்தில் அமலாபாலுக்கு இரட்டை வேடம் கொடுக்கின்றார்.இந்த புதிய படத்தில் சமுத்திரக்கனியே ஹீரோவாக நடிக்கவிருக்கிறார். நெகட்டிவ் ஹீரோவாக வரும் சமுத்திரக்கனிக்கு ஜோடியாக ஒரு அமலாபாலும், போலீஸ் அதிகாரியாக ஒரு அமலாபாலும் நடிக்கின்றனர். அமலாபால் ஏற்கனவே விஜய்யின் தலைவா படத்தின் போலீஸ் அதிகாரியாக நடித்தவர் என்பது தெரிந்ததே.

இந்த படத்தின் ஆரம்பகட்ட வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சமுத்திரக்கனி, அமலாபால் தவிர இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் பரிசீலிக்கபப்ட்டு வருகிறது. இதன் முறையான அறிவிப்பு இன்னும் இரண்டொரு நாட்களில் வரும் என கூறப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி