கேரளாவில் கவர்னர் பதவி வகிக்க ஆர்வமாக இருப்பதாகவும், கேரளாவில் தங்கி இருப்பதில் மகிழ்ச்சி அடைந்ததாகவும் ஷீலா தீட்சித் தெரிவித்துள்ளார்.ஷீலா தீட்சித் டெல்லியில் முதல் மந்திரியாக இருந்த போது மருத்துவக்கல்லூரி மாணவி ஒருவர் ஒரு கும்பலால் கொடூரமாக கற்பழிக்கபட்டு கொலை செய்யபட்டார். இந்த செய்தி உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது பேட்டி அளித்த ஷீலா தீட்சீத் பெண்கள் மாலை 6 மணிக்கு மேல் எதற்கு வெளியே செல்கிறார்கள். என கேட்டார் இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது
டெல்லியில் பெண்களுக்கு எதிராக நடைபெற்ற வன்கொடுமை சம்பவங்களே இவரது தோல்விக்கு காரணமாக கூறப்பட்டது. இப்பொது கேரளாவில் இவர் கவர்னராக நியமிக்கபட்டதும் இவருக்கு எதிரான சர்சைகள் கிளம்பி உள்ளது.
கேரளாவை சேர்ந்தவர்கள் தங்களது சமூக இணைய தளங்களில் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.நடிகை ரீமா கல்லிங்கல் தனது சமூக இணைய தளத்தில் கேரள கவர்னராக பதவி ஏற்க ஷீலா தீட்சித் வருகிறார்… இனி கேரள பெண்கள் யாரும், மாலை 6 மணிக்கு மேல் வெளியே வரக்கூடாது. இவ்வாறு தனது பேஸ்புக் கில் அவர் ஷீலா தீட்சித்தை விமர்சித்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி