செய்திகள்,பொருளாதாரம் சென்செக்ஸ் புதிய உச்சத்தை தொட்டு சாதனை!…

சென்செக்ஸ் புதிய உச்சத்தை தொட்டு சாதனை!…

சென்செக்ஸ் புதிய உச்சத்தை தொட்டு சாதனை!… post thumbnail image
மும்பை:-கடந்த டிசம்பர் 9ம் தேதிக்கு பிறகு மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் இன்று வர்த்தகத்திற்கு இடையே 215 புள்ளிகள் அதிகரித்து 21,483.74 என்ற புதிய உச்சத்தை தொட்டது. அதன்பிற்கும் வர்த்தகம் ஏறுமுகமாகவே இருந்தது.வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 237 புள்ளிகள் அதிகரித்து 21513 என்ற உச்சத்துடன் நிலைபெற்றது.

இதேபோல் தேசிய பங்குச்சந்தையும் ஏற்றத்துடன் காணப்பட்டது. நிப்டியின் குறியீட்டெண் 72.5 புள்ளி உயர்ந்து 6401ல் வர்த்தகம் முடிவடைந்தது. தங்கத்தின் மீதான கட்டுப்பாடுகளை அடுத்து இந்தியாவின் நடப்பு கணக்கு பற்றாக்குறை குறைந்து வருகிறது. இதையடுத்து கடந்த இரண்டு வாரங்களாக பல்வேறு துறைகளில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிகமாக முதலீடு செய்து வருகின்றனர். இதனால், இன்று சென்செக்ஸ் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

இதுகுறித்து முன்னணி பங்கு தரகர்கள் கூறுகையில், “ஆசிய பங்குச்சந்தைகளில் சில்லறை முதலீட்டாளர்கள் அதிகமாக பங்குகளை வாங்கத் துவங்கியுள்ளனர். மேலும் ஐரோப்பிய பங்குச்சந்தைகள் இன்று உயர்வுடன் வர்த்தகத்தை துவங்கியது இந்திய சந்தைகளை ஊக்குவித்துள்ளது” என்று தெரிவித்தனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி