செய்திகள்,திரையுலகம் படப்பிடிப்புக்காக ஊர் ஊராக சுற்றும் ஹன்சிகா!…

படப்பிடிப்புக்காக ஊர் ஊராக சுற்றும் ஹன்சிகா!…

படப்பிடிப்புக்காக ஊர் ஊராக சுற்றும் ஹன்சிகா!… post thumbnail image
சென்னை:-ஹன்சிகா தமிழில் ‘வாலு’, ‘அரண்மனை’, ‘மான் கராத்தே’, ‘உயிரே உயிரே’, ‘மீகாமன்’, ‘வேட்டை மன்னன்’ ஆகிய ஆறு படங்களில் நடிக்கிறார். தெலுங்கிலும் நான்கு படங்கள் கைவசம் உள்ளன. இருமொழிகளிலும் பிசியான நடிகையாகிவிட்டார். சிம்புவுடனான காதலும் முறிந்துள்ளது.இந்நிலையில் ஹன்சிகா அளித்த பேட்டி வருமாறு:–

சூட்கேசுடன் சுற்றுவதே என் வாழ்க்கையாகி விட்டது. ஆடைகளை சூட்கேசுக்குள் அடக்கி வைப்பதும், படப்பிடிப்புக்காக வெளியூருக்கு பயணம் மேற்கொள்வதும், பிறகு வீட்டுக்கு திரும்புவதும் மீண்டும் சூட்கேசில் துணிகளை அடுக்கி வேறு படப்பிடிப்புக்காக புறப்படுவதும் என நாட்கள் போய்க்கொண்டு இருக்கிறது.தமிழ், தெலுங்கில் பத்து படங்களில் நடிக்கிறேன். ஓய்வெடுக்க நேரமே கிடைக்கவில்லை. இந்த வாழ்க்கை எனக்கு போரடிக்கவும் இல்லை. சில வருடங்களுக்கு முன்பு ஓரிரு படங்களில்தான் நடித்தேன். அப்போது ஓய்வே இல்லாத அளவுக்கு நிறைய படங்களில் நடிக்க வேண்டும். பிசியான நடிகையாக வலம் வரவேண்டும் என்று கடவுளை வேண்டினேன். என் பிரார்த்தனை பலித்து விட்டது.

ஓய்வே இல்லாத அளவுக்கு படங்கள் குவிந்து விட்டன. எனக்கு 22 வயதுதான் ஆகிறது. எதிர்காலம் நல்ல விதமாக அமையும் என்ற நம்பிக்கை இருக்கிறது. என் தோழிகள் இப்போதுதான் டிகிரி படிப்பை முடித்துள்ளனர். அவர்கள் செட்டில் ஆவதற்கு இன்னும் பத்து வருடங்கள் ஆகும். எனவே நானும் அதுவரை நிறைய படங்களில் நடிக்கலாம்.
தமிழ், தெலுங்கு திரையுலகில் எனக்கு எந்த நடிகையும் போட்டி இல்லை. எனக்கு நானேதான் போட்டி. முந்தைய படத்தில் நடித்ததைவிட அடுத்த படத்தில் சிறப்பாக நடிக்க வேண்டும் என்பதே என் எண்ணமாக இருக்கிறது. சக நடிகைகள் நன்றாக நடித்து இருந்தால் அவர்களை போனில் பாராட்டி விடுகிறேன்.இவ்வாறு ஹன்சிகா கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி