செய்திகள்,திரையுலகம் பாலு மகேந்திராவின் இறுதி சடங்கிற்கு அஜீத் வராததற்கு உண்மையான காரணம்!…

பாலு மகேந்திராவின் இறுதி சடங்கிற்கு அஜீத் வராததற்கு உண்மையான காரணம்!…

பாலு மகேந்திராவின் இறுதி சடங்கிற்கு அஜீத் வராததற்கு உண்மையான காரணம்!… post thumbnail image
சென்னை:-பழம்பெரும் இயக்குனர் பாலு மகேந்திரா சிலநாட்கள் முன் மரணம் அடைந்ததை ஒட்டி, திரையுலக பிரபலங்கள் அனைவரும் வந்து அவருக்கு இறுதி மரியாதை செய்தனர். தமிழ் திரையுலகில் தற்போது முன்னணியில் இருக்கும் பலர் பாலு மகேந்திராவின் பள்ளியில் இருந்து வந்தவர்கள் என்பதால் திரையுலகமே அவரது இறுதி சடங்கிற்கு திரண்டு வந்தது.

இந்நிலையில் பாலு மகேந்திராவின் இறுதி சடங்கை முன்னின்று நடத்தியதில் இயக்குனர் பாலாவுக்கு முக்கிய பங்கு உண்டு. பாலா, பாலு மகேந்திராவிடம் உதவியாளராக இருந்தார் என்பது மட்டுமில்லாமல், அவருடைய குடும்பத்தில் ஒருவராகவே வாழ்ந்தவர். இறுதிச்சடங்கிற்கு வந்த வி.ஐ.பிக்கள் பாலாவிடம் துக்கம் விசாரித்ததில் இருந்தே இதை புரிந்து கொள்ளலாம்.

இந்நிலையில் பாலு மகேந்திராவின் இறுதிச்சடங்கிற்கு அஜீத் வராததற்கு தற்போது கோலிவுட்டில் ஒரு சர்ச்சைக்குரிய காரணம் சொல்லப்பட்டு வருகிறது. பாலாவின் ‘நான் கடவுள்’ படத்திற்கு முதலில் கமிட் ஆனவர் அஜீத்தான். இதற்காக ஒருவருடம் முடி மற்றும் தாடி எல்லாம் வளர்க்க சொல்லியிருந்தார் பாலா. ஆனால் திடீரென அந்த படத்தில் இருந்து அஜீத்தை தூக்கிவிட்டு, ஆர்யாவை நடிக்கவைத்தார். இதனால் இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டதாகவும், எனவே பாலுமகேந்திராவின் இறுதி நிகழ்ச்சிக்கு சென்றால் பாலாவை சந்திக்கவேண்டியது வரும் என எண்ணியே அஜீத் வரவில்லை என்று கூறப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி