இப்படத்தில் கானா பாடல் ஒன்றை அனிருத் உருவாக்கியுள்ளாராம். அந்த பாடலை பாட வித்தியாசமான குரலை தேடிவந்த இவருக்கு ‘கானா’ என்றாலே உடனே ஞாபகத்துக்கு வரும் இசையமைப்பாளர் தேவா நினைவில்வர, உடனே அவரை தொடர்புகொண்டு இப்பாடலை பாடிக் கொடுக்க சம்மதம் கேட்டுள்ளார். அவரும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் உடனே சம்மதித்து பாடிக் கொடுத்துள்ளார்.
இப்பாடல் படத்தின் கிளைமாக்சில் இடம்பெறுகிறதாம். இது இந்த வருடத்தின் சிறந்த பாடலாக இருக்கும் என அனிருத் தெரிவித்துள்ளார். இந்நிலையில், இந்த பாடலுக்கு சிவகார்த்திகேயனுடன் இணைந்து அனிருத்தும் ஆடியுள்ளாராம்.
ஏற்கெனவே அனிருத், சிவகார்த்திகேயன் நடித்து வெளிவந்த எதிர்நீச்சல் படத்தில் ஒரு பாடலுக்கு வந்து போனார். அதன்பிறகு ‘வணக்கம் சென்னை’ படத்தில் கேங்ஸ்டர் என்ற பாடலுக்கு நடனமாடியிருந்தார். தற்போது சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து ‘மான் கராத்தே’ படத்தில் டான்ஸ் ஆடியிருக்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி