செய்திகள்,திரையுலகம் ரஜினியுடன் மீண்டும் இணையும் கே.எஸ்.ரவிகுமாரின் புது படம் ‘ராணா’!…

ரஜினியுடன் மீண்டும் இணையும் கே.எஸ்.ரவிகுமாரின் புது படம் ‘ராணா’!…

ரஜினியுடன் மீண்டும் இணையும் கே.எஸ்.ரவிகுமாரின் புது படம் ‘ராணா’!… post thumbnail image
சென்னை:-கோச்சடையான் படத்தை அடுத்து ரஜினியின் அடுத்த படம் எது என்ற கேள்வி கோலிவுட்டில் சில நாட்களாக எழுந்து வந்துள்ளது. ரஜினியின் அடுத்த படத்தை கே.எஸ்.ரவிகுமார், கே.வி.ஆனந்த் மற்றும் ஷங்கர் ஆகிய இயக்குனர்களில் ஒருவர் இயக்குவார் என கூறப்பட்டது. தற்போது ரஜினியின் அடுத்த படத்தை கே.எஸ்.ரவிகுமார் இயக்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

முத்து திரைப்படத்தில் ஆரம்பித்த ரஜினி-ரவிகுமார் நட்பு, இன்று வரை தொடர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கோச்சடையான் படத்திற்கு முன்னால் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் உடல்நிலை காரணமாக நிறுத்தப்பட்ட ராணா படத்தை மீண்டும் உயிர்ப்பிக்க ரஜினியும் ரவிகுமாரும் முடிவு செய்துள்ளனர்.தற்போது ராணா கதை ஒரு இந்தி தொலைக்காட்சியில் தொடராக வெளிவந்து கொண்டிருக்கிறது. இதற்கு இந்தியா முழுவதும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. ராணாவின் வீரதீரத்தை வட இந்திய மக்களும், தென்னிந்திய மக்களும் போற்றி புகழ்கின்றனர்.

இந்த நேரத்தில் ராணா திரைப்படமாக, அதுவும் ரஜினி நடித்து வெளிவந்தால் கண்டிப்பாக ஹிட் ஆகும் என்ற எண்ணத்தில் இந்த படத்தை மீண்டும் துவங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் ராணா படத்தில் முதலில் கமிட் ஆன தீபிகா படுகோனே தற்போது நடிக்கவில்லை. கோச்சடையான் படத்தில் தீபிகா நடித்துள்ளதால், ‘ராணா’ படத்திற்கு வேறு ஹீரோயினியை ஒப்பந்தம் செய்ய முடிவு செய்துள்ளனர்.இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் சில நாட்களில் ஊடகங்களில் வெளிவரும்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி