செய்திகள் அமெரிக்காவில் காணாமல் போன இந்திய வம்சாவளி மாணவர் பிணமாக மீட்பு…

அமெரிக்காவில் காணாமல் போன இந்திய வம்சாவளி மாணவர் பிணமாக மீட்பு…

அமெரிக்காவில் காணாமல் போன இந்திய வம்சாவளி மாணவர் பிணமாக மீட்பு… post thumbnail image
சிகாகோ:-அமெரிக்காவின் மோர்டன் குரோவ் என்ற பகுதியைச் சேர்ந்த இந்திய வம்சாவளி மாணவரான பிரவீன். எம்.வர்கீஸ்(19) தெற்கு இல்லினாயிஸ் பல்கலைக்கழகத்தில் பயின்று வந்தார். இவர் கடந்த வாரம் இரவு 11 மணி அளவில் கார்போன்டேல் என்ற பகுதியிலிருந்து காணாமற்போனதாக அறிவிக்கப்பட்டார்.

அன்று இரவு அவரது இணையதளப் பகுதியில் அவர் அனுப்பியிருந்த குறிப்பில், அவர் எங்கோ வழி தெரியாமல் அலைவதுபோல் குறிப்பிடப்பட்டிருந்தது. அது தவிர வேறு எதுவும் தெரியாத நிலையில் காவல்துறையினர் அவரைத் தேடி வந்தனர். அவரைப் பற்றிய தகவல் தெரிவிப்பவர்களுக்கு 15,000 அமெரிக்க டாலர்களை அளிப்பதாகவும் அவரது குடும்பத்தினர் அறிவித்திருந்தார்கள்.இந்நிலையில், அவர் காணாமற்போனதாகத் தெரிவிக்கப்பட்ட கார்போன்டேலில் உள்ள மரங்கள் அடர்ந்த பகுதியில் நேற்று அவரது பிணத்தை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அவரது இறப்பில் சந்தேகம் எதுவும் எழவில்லை என்ற போதிலும் அதற்கான சரியான காரணத்தைக் கண்டுபிடிக்க காவல்துறையால் இயலவில்லை.

இரவு நேரத்தில் வெஸ்ட் காலேஜ் ரோட்டில் காணப்பட்ட வர்கீஸ் அங்கிருந்து யாருடனாவது காரில் சென்றிருக்கலாம், வழியில் அவர்களுடன் ஏற்பட்ட பிரச்சினையில் இறங்கி இந்த மரங்கள் அடர்ந்த பகுதிக்குள் ஓடியிருக்கக்கூடும், பின் அங்கிருந்து மீண்டு வெளியே வரத் தெரியாமல் சிக்கியிருக்கக்கூடும் என்று காவல்துறை கருதுகிறது. அந்தப் பகுதியில் காணப்பட்ட கடினமான நிலப்பரப்பும், இரவின் குளிர்ந்த தட்ப வெப்பமும் கூட அவரது இறப்பிற்கு காரணமாக இருக்கக்கூடும் என்று காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.துயரம் நிறைந்த நேரத்தில் தங்களுக்கு ஆதரவாக இருந்து, வர்கீசுக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் அவரது குடும்பத்தினர் நன்றி தெரிவித்து பேஸ்புக்கில் தகவல் வெளியிட்டுள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி