அரசியல்,செய்திகள் முதல் மந்திரி மீது ஷு வீச்சு…

முதல் மந்திரி மீது ஷு வீச்சு…

முதல் மந்திரி மீது ஷு வீச்சு… post thumbnail image
டப்வாலி:-கடந்த 2ம் தேதி பானிப்பட் நகரில் நடந்த பேரணியில் கலந்து கொண்ட ஹரியானா மாநில முதல் மந்திரியான பி.எஸ்.ஹூடாவை மர்ம நபர் ஒருவர் கன்னத்தில் அறைந்தார். அனேகமாக அந்த அதிர்ச்சியிலிருந்து அவர் இன்னும் மீண்டு வந்திருக்கமாட்டார்.

இந்நிலையில் டப்வாலியில் நடந்த தொடக்க விழா ஒன்றில் கலந்து கொள்ள வந்த அவர் மீது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ஷு வீசினார். எனினும் இலக்கு தவறியதால் அவர் மீது அந்த ஷு படவில்லை. எனினும் ஷு வீசிய நபர் கண்டுபிடிக்கப்பட்டு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டிருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன.

அந்த தொடக்க விழா தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், திட்டமிட்டபடி முதல் மந்திரி அந்த விழாவில் பங்கு கொண்டுள்ளதாகவும் அரசு துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி