செய்திகள் திருடிய வீட்டில் தூங்கிய திருடன்…

திருடிய வீட்டில் தூங்கிய திருடன்…

திருடிய வீட்டில் தூங்கிய திருடன்… post thumbnail image
லண்டன்:-இங்கிலாந்தின் மேற்கு யோர்க்ஷயர் மாகாணத்தில் லீட்ஸ் என்ற இடத்தில் உள்ள வீட்டில் பெண்மணி ஒருவர் வசித்து வருகிறார். தினமும் காலையில் வேலைக்கு செல்லும் அவர் மாலைதான் வீடு திரும்புவார். சம்பவத்தன்று வழக்கம் போல வேலை முடிந்து வீடு திரும்பிய போது, வீட்டின் கண்ணாடி ஜன்னல்கள் உடைந்து கிடந்தது. அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். வீட்டுக்குள் இருந்த டிவி, லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை காணவில்லை. உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

விரைந்து வந்த போலீசார், வீடு முழுவதும் சல்லடை போட்டு சோதனை நடத்தினர். மாடியில் உள்ள பெட்ரூமுக்கு சென்று பார்த்த போது, அங்கு படுக்கையில் ஒரு வாலிபர் குறட்டை விட்டு தூங்கி கொண்டிருந்தார். அவர் அருகே டிவி, லேப்டாப், நகை பெட்டி இருந்தது. வாலிபரை போலீசார் எழுப்பினர். போலீசை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த வாலிபர், அங்கிருந்து ஓட முயன்றார். அவனை மடக்கி பிடித்து போலீசார் விசாரித்தனர்.

வாலிபரின் பெயர் பிராங்கி பிளானிகன் என்பதும் வீட்டுக்குள் புகுந்து டிவி, லேப்டாப், நகைபெட்டி ஆகியவற்றை திருடியதும் தெரிய வந்தது. வீட்டின் மாடி அறைக்கு சென்ற போது, படுக்கை சொகுசாக இருந்ததால் அசதியில் அப்படியே உறங்கி விட்டதாக தெரிவித்தான். இதனையடுத்து பிராங்கியை கைது செய்த போலீசார் லீட்ஸ் நகர நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். திருடியதை அவன் ஒப்புக் கொண்டதையடுத்து, 18 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அவனை போலீசார் சிறையில் அடைத்தனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி