அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் இந்தியாவின் அடுத்த பிரதமர் ஒரு பிரம்மச்சாரியா?…

இந்தியாவின் அடுத்த பிரதமர் ஒரு பிரம்மச்சாரியா?…

இந்தியாவின் அடுத்த பிரதமர் ஒரு பிரம்மச்சாரியா?… post thumbnail image
வரும் நாடாளுமன்ற தேர்தல் பணிகளை அனைத்து கட்சிகளும் தொடங்கிவிட்ட நிலையில், இந்தியாவின் அடுத்த பிரதமர் யார்? என்ற கேள்வி அனைத்து இந்தியர் மனதிலும் எழுந்து வருகிறது.

பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக நரேந்திரமோடிக்கும், காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர் ராகுல்காந்திக்கும் தான் நேருக்கு நேர் போட்டி. இரு தலைவர்களும் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஆதரவு கேட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பிரதமர் ரேசில் உத்தரபிரதேசத்தின் மாயாவதி, மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழக முதல்வர் ஜெயலலிதா, ஆகிய மூவரும் களத்தில் இருக்கின்றனர். ஆக பிரதமர் களத்தில் இருக்கும் ஐந்து பேருமே திருமணம் ஆகாதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஐந்து பேர்களில் யார் பிரதமராக வந்தாலும், அவர் பிரம்மச்சாரிய பிரதமராகவே கருதப்படுவார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி