செய்திகள்,திரையுலகம் நடிகர் சூர்யா படப்பிடிப்பில் பிரச்சனை…

நடிகர் சூர்யா படப்பிடிப்பில் பிரச்சனை…

நடிகர் சூர்யா படப்பிடிப்பில் பிரச்சனை… post thumbnail image
லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா, சமந்தா நடிக்கும் படம் ‘அஞ்சான்’. சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் ஒரு பாடல் காட்சி சில நாட்களுக்கு முன் புனேயில் படமாக்கப்பட்டது. சென்னையில் இருந்து ராஜுசுந்தரம் தலைமையில் நடன கலைஞர்கள் சென்றனர். வழக்கமாக தமிழகத்தை தவிர்த்து மற்ற மாநிலங்களில் படப்பிடிப்பு நடக்கும்போது, அந்தந்த மாநிலத்தை சேர்ந்த சினிமா கலைஞர்களில் 30 சதவீதம் பேரை பயன்படுத்த வேண்டும்.

தமிழகத்தில் இருந்து செல்லும் கலைஞர்கள் 70 சதவீதம் பேர் பணியாற்றலாம். ‘அஞ்சான்’ படத்தின் பாடல் காட்சியில், சென்னையை சேர்ந்த நடன கலைஞர்கள் 100 சதவீதம் பேர் பங்கேற்றனர். இதையறிந்த மும்பை சினிமா நடன கலைஞர்கள், புனேயில் சூர்யா, சமந்தா பங்கேற்ற படப்பிடிப்புக்கு வந்து எதிர்ப்பு தெரிவித்தனர். 30 சதவீதம் பேரை ஏன் பயன்படுத்தவில்லை? என்று கேட்டு பிரச்சனை செய்தனர். இதையடுத்து 4 மணி நேரம் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. பிறகு பாடல் காட்சியில் தங்கள் சங்கத்தை சேர்ந்தவர்களை பயன்படுத்தாததால், தங்கள் சங்கத்துக்கு 60 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்ட வேண்டும் என்று மும்பை நடன கலைஞர்கள் கேட்டார்கள்.

உடனே ‘அஞ்சான்’ பட தயாரிப்பாளர் சார்பில் அபராத தொகை செலுத்தப்பட்டது. இதையடுத்து பிரச்சனை முடிவுக்கு வந்து, தொடர்ந்து படப்பிடிப்பு நடந்தது. ஆனால், சென்னை நடன கலைஞர்களுக்கு அளிக்கும் சம்பளத்தில் இருந்து 60 ஆயிரம் ரூபாயை ‘அஞ்சான்’ தயாரிப்பு தரப்பு பிடித்தம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இதனால், பெப்சி அமைப்பில் நடன கலைஞர்கள் புகார் அளித்துள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி