செய்திகள்,திரையுலகம் ராஜ்கிரணை வெட்கப்பட வைத்தை நடிகை!…

ராஜ்கிரணை வெட்கப்பட வைத்தை நடிகை!…

ராஜ்கிரணை வெட்கப்பட வைத்தை நடிகை!… post thumbnail image
சென்னை:-ராஜ் கிரண் என்றால் என் ராசாவில் மனசிலே படத்தில் அவர் நல்லி எழும்பை கடித்து இழுக்கும் காட்சிதான் உடனே நினைவுக்கு வரும். அப்படிப்பட்ட ராஜ் கிரண் இடையில் ஏற்பட்ட தோல்விகளில் நடிப்பிலிருந்து விலகியிருந்தார். மீண்டும் லாரன்ஸ் டைரக்ட் செய்த முனி உட்பட பல படங்களில் தலை காட்ட ஆரம்பித்தார்.

குறிப்பாக சேரன் டைரக்‌ஷனில் நடித்த தவமாய் தவமிருந்து படம் அவருக்கு ஒரு நல்ல கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் என்ற பெயரை வாங்கித் தந்தது.தொடர்ந்து அவ்வப்போது சில படங்களில் தலை காட்டி வரும் அவர் புதிதாக சிவப்பு என்ற படத்திலும் நடித்திருக்கிறார். ஈழத்தமிழர்களின் துயரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் இந்தப்படத்தை கழுகு பட டைரக்டர் சத்யசிவா டைரக்ட் செய்கிறார்.சமீபத்தில் நடந்த இந்தப் படத்தின் பிரஸ்மீட்டில் பேசிய நடிகை மஞ்சரி படத்தின் ஹீரோவை விட ராஜ்கிரணைப் பற்றித்தான் புகழ்ந்து தள்ளினார்.

ராஜ்கிரண் சார் கூட நடிச்சதுல எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. அவர் பார்க்கிறதுக்கு முரட்டு ஆளாத் தெரியிறாரு. ஆனா நெருங்கிப் பழகிப் பார்த்தப்பத்தான் அவர் ஒரு அமுல் பேபி மாதிரி ரொம்ப சாப்ட்டான ஆளுன்னு தெரிஞ்சது.நானும் அவரும் நெறைய விஷயங்களை பேசிக்கிட்டோம். அவர்கிட்ட இருந்து நெறைய விஷயங்களையும் நான் கத்துக்கிட்டேன் என்றார்.
அப்போது பக்கத்தில் இருந்த ராஜ்கிரண் வெட்கப்பட்டு சிரித்த அழகைப் பார்க்க வேண்டுமே..? அந்த வெட்கம் மஞ்சரிக்குக் கூட வராது. அப்படி ஒரு வெட்கம்!.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி