செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் ரஜினியின் ‘கோச்சடையான்’ ஏப்ரல் 11ல் ரிலீஸ்:அதிகாரப்பூர்வ அறிவிப்பு…

ரஜினியின் ‘கோச்சடையான்’ ஏப்ரல் 11ல் ரிலீஸ்:அதிகாரப்பூர்வ அறிவிப்பு…

ரஜினியின் ‘கோச்சடையான்’ ஏப்ரல் 11ல் ரிலீஸ்:அதிகாரப்பூர்வ அறிவிப்பு… post thumbnail image
சென்னை:-சூப்பர் ஸ்டார் ரஜினி நுரையீரல் பாதிப்பு பிரச்சினையிலிருந்து மீண்டு வந்தவுடன் தனது மகள் சௌந்தர்யா இயக்கத்தில் நடிக்க முடிவெடுத்து அப்படத்திற்கு கோச்சடையான் என்று பெயரிடப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இப்படத்தை தயாரித்த ஈராஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் ஏப்ரல் 11ம் தேதி இப்படம் திரைக்கு வர உள்ளதாக கூறியுள்ளது. ஹாலிவுட் படங்களில் பயன்படுத்தும் செயல்திறன் பிடிப்பு தொழில்நுட்பத்தின் மூலம் படமாக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இப்படத்தில் ரஜினி ஜோடியாக தீபிகா படுகோனேவும், மற்ற கதாபாத்திரங்களில் ஷோபனா, சரத்குமார், ஆதி ஆகியோர் நடித்துள்ளனர். இந்தியாவில் செயல்திறன் பிடிப்பு தொழில்நுட்பத்தின் மூலம் படம்பிடிக்கப்பட்ட முதல் படமாக இது இருக்கும் என கூறப்பட்டுள்ளது. தமிழ், இந்தி, தெலுங்கு, மராத்தி, போஜ்புரி, பெங்காலி மற்றும் பஞ்சாபி மொழிகளில் இப்படம் படமாக்கப்பட்டுள்ளது என ஈராஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி