செய்திகள் வெள்ளிக்கிழமை 2014ம் ஆண்டின் இரண்டாவது சூப்பர் மூன்…

வெள்ளிக்கிழமை 2014ம் ஆண்டின் இரண்டாவது சூப்பர் மூன்…

வெள்ளிக்கிழமை 2014ம் ஆண்டின் இரண்டாவது சூப்பர் மூன்… post thumbnail image
இந்தியா:-2014ம் ஆண்டின் இரண்டாவது சூப்பர் மூன் வரும் வெள்ளிக்கிழமை அன்று விண்வெளியில் காணலாம் என்று விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இதன் முதல் சூப்பர் மூன் இந்த மாதம் 1ம் தேதி நடந்து முடிந்துள்ளது. இதேபோன்று ஒரே மாதத்தில் இரண்டு முறை தோன்றும் சூப்பர் மூன் இனி வரும் 2018ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தான் வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. வரும் வெள்ளிக்கிழமை அன்று இரண்டாவது முறை தோன்றும் சூப்பர் மூன் மாலை 3.30 மணிக்கு காணலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

மற்ற மூன்று சூப்பர் மூன்கள் ஜூலை 12, ஆகஸ்ட் 10 மற்றும் செப்டம்பர் 9ஆம் தேதியன்று காணப்படும். ஒன்று ஆகஸ்ட் மாதம் பூமிக்கு மிக அருகில் இருக்கும் என்றும் கூறியுள்ளனர். அந்த சமயத்தில் நிலவின் அளவு 14% பெரியதாகவும், 30% அதிக பிரகாசமாகவும் காணப்படும் என்று விண்வெளி பவுண்டேஷன் அமைப்பின் தலைவர் சி.பி.தேவ்கன் குறிப்பிட்டுள்ளார். பூமியைச் சுற்றிவரும் சூரியன், சந்திரன் ஆகியவை இந்த ஆண்டு ஐந்து முறை ஒரே நேர்க்கோட்டில் சந்திக்கும் வாய்ப்பு வருகின்றது.

அப்போது சந்திரன் சூரியனைவிட பூமியின் அருகில் வருவதால் அதனுடைய பிரகாசம் அதிகமாகவும், அளவு பெரியதாகவும் தெரியும் வாய்ப்பு உள்ளது. அளவில் பெரியதாகத் தோன்றும் இந்த சந்திரனே சுமார் 30 வருடங்களுக்கு முன் கடந்த 1979ஆம் ஆண்டில் சூப்பர் மூன் என்று ரிச்சர்டு நொள்ளே என்ற வானவியல் ஆராய்ச்சியாளரால் பெயரிடப்பட்டது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி