செய்திகள் வீடு, வீடாக பணம் வசூலித்து பெற்றோர் இல்லாத ஜோடிக்கு திருமணம் நடத்திய ஊர் மக்கள்…

வீடு, வீடாக பணம் வசூலித்து பெற்றோர் இல்லாத ஜோடிக்கு திருமணம் நடத்திய ஊர் மக்கள்…

வீடு, வீடாக பணம் வசூலித்து பெற்றோர் இல்லாத ஜோடிக்கு திருமணம் நடத்திய ஊர் மக்கள்… post thumbnail image
ஊத்துக்கோட்டை:-ஊத்துக்கோட்டை அருகே உள்ள கோட்டைமிட்டா பகுதியை சேர்ந்தவர் பீபீ ஜான். இவரின் பெற்றோர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டனர்.இதையடுத்து அதே பகுதியை சேர்ந்த சிவா–ரேணுகா தம்பதியினர் அடைக்கலம் கொடுத்தனர்.

திருமண வயதை எட்டிய பீபீ ஜானுக்கு முஸ்லிம் ஜமாத் கமிட்டி மற்றும் ஊர் பொது மக்கள் மணமகனை தேடினர். பொன்னேரி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த கலீல் என்பவரை அவருக்கு திருமணம் செய்ய நிச்சயம் செய்தனர். எலக்டீரிசனான அவருக்கும் பெற்றோர் இல்லை.இதையடுத்து பீபீ ஜான்–கலீல் திருமணத்தை சத்தியவேடு கோட்டைமிட்டா பகுதியை சேர்ந்த அனைத்து மதத்தினர் மற்றும் ஊர் பொது மக்கள் நடத்த திட்டமிட்டனர்.

வீடு வீடாக பணம் வசூல் செய்து நேற்று காலை அவர்களது திருமணம் விமரிசையாக நடந்தது. ஊர் பொது மக்கள் அனைவரும் ஜாதி–மத வேறுபாடின்றி அவர்களை வாழ்த்தினர். இதனால் ஊரே விழாக்கோலமாக காணப்பட்டது.இதில் சிறப்பு அழைப்பாளராக சத்தியவேடு கோர்ட்டு நீதிபதி கிருஷ்ணன் குட்டி கலந்து கொண்டார். மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக இந்த திருமணம் நடந்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி