செய்திகள் கிரிக்கெட் வீரர்கள் 5 பேர் சுட்டுக்கொலை…

கிரிக்கெட் வீரர்கள் 5 பேர் சுட்டுக்கொலை…

கிரிக்கெட் வீரர்கள் 5 பேர் சுட்டுக்கொலை… post thumbnail image
காபூல்:-ஆப்கானிஸ்தானில் உள்ளூர் கிரிக்கெட் வீரர்களை மர்ம மனிதர்கள் துப்பாக்கியால் சுட்டுகொன்று விட்டு தப்பிவிட்டனர். இச்சம்பவத்தில் 5 வீரர்கள் பலியானார்கள்.இதுகுறித்து லஹ்மன் மாகாண செய்தி தொடர்பாளர் சர்ஹாதீ கூறியதாவது-

இச்சம்பவம் லஹ்மன் மாகாணத்தில் உள்ள அலிங்கர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்றுள்ளது. விளையாடிக்கொண்டிருந்த வீரர்கள் மீது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம மனிதர்கள் துப்பாக்கியால் சராமரியாக சுட்டுவிட்டு தப்பிச் சென்று விட்டனர். இதில் 5 பேர் வீரர்கள் பலியானார்கள்.இதுவரை தாக்குதலுக்கு எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஆனால், தலிபான் தீவிரவாதிகள் தாக்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.இவ்வாறு கூறினார்.

வீரர்கள் மீதான தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்சாய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.இதேபோல், தென் ஹெல்மண்ட் பகுதியில் பத்திரிகையாளர் ஒருவர் இறந்து கிடந்ததாகவும் தகவல் தெரிவிக்கின்றன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி