செய்திகள்,திரையுலகம் பாலச்சந்தரின் பாராட்டைப் பெற்ற திரைப்படம்…

பாலச்சந்தரின் பாராட்டைப் பெற்ற திரைப்படம்…

பாலச்சந்தரின் பாராட்டைப் பெற்ற திரைப்படம்… post thumbnail image
மோகன்லால், மீனா உள்ளிட்ட பலர் நடிப்பில் ஜீது ஜோசப் இயக்கத்தில் வெளியான மலையாளப் படம் ‘த்ரிஷ்யம்’. இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. பலர் பல்வேறு மொழிகளில் மொழிமாற்றம் செய்வதற்கான உரிமைக்கு போட்டியிட்டு வருகிறார்கள்.

சென்னையில் இப்படத்தினைப் பார்த்த இயக்குநர் பாலசந்தர் ‘த்ரிஷ்யம்’படக்குழுவினரைப் பாராட்டி இ-மெயில் ஒன்றினை அனுப்பியிருக்கிறார்.

அதில், ” பார்வையாளனைக் குறைவாக மதிப்பிடாமல் புத்திசாலித்தனத்தோடு எடுக்கப்பட்ட படம். நடிகர்களும் இயக்குநரும் இணைந்து ஒரே நோக்கில் பணியாற்றினால் படம் எவ்வளவு நன்றாக வரும் என்பதற்கு உதாரணம் ‘த்ரிஷ்யம்’ “ எனத் தெரிவித்துள்ளார்.

விமர்சகர்கள் மத்தியில் மட்டுமன்றி, ரசிகர்கள் மத்தியிலும் ‘த்ரிஷ்யம்’ பெறும் வரவேற்பைப் பெற்று, வசூலில் சாதனை படைத்து வருகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி