செய்திகள்,தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் ஏ.டி.எம். கார்டுகளை தாக்கும் புதிய வைரஸ் கண்டுபிடிப்பு…

ஏ.டி.எம். கார்டுகளை தாக்கும் புதிய வைரஸ் கண்டுபிடிப்பு…

ஏ.டி.எம். கார்டுகளை தாக்கும் புதிய வைரஸ் கண்டுபிடிப்பு… post thumbnail image
புதுடெல்லி:-வங்கிகளில் பணம் எடுக்க பயன்படுத்தப்படும் ஏ.டி.எம். கார்டுகள், பொருட்களை வாங்க டெபிட் கார்டுகள் ஆகவும் பயன் படுத்தப்படுகின்றன. ஆனால் இவை டெபிட் கார்டுகளாக பயன்படுத்தும் போது அதில் புதிய வகை வைரஸ் பரவுகிறது. இதை மட்டுமின்றி கிரீடிட் கார்டுகளிலும் பரவுகின்றன.

பொருட்கள் வாங்க பயன்படுத்தும் போது அக்கார்டுகளின் ரகசிய குறியீட்டு எண்ணையும் பதிவு செய்ய வேண்டும் என இந்திய ரிசர்வ் வங்கி கடந்த டிசம்பர் மாதம் ஒரு உத்தரவு பிறப்பித்தது. அதை தொடர்ந்து புதிய வகை வைரஸ் பரப்பப்பட்டு வருகிறது.

டிரோஜான்’ குடும்பத்தை சேர்ந்த இந்த வைரசுக்கு ‘டெஸ்டர்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த வகை வைரஸ் தாக்குவதால் கார்டுதாரரின் பெயர், கணக்கு எண், கார்டு காலாவதியாகும் தேதி, சி.வி.வி. கோடு உள்ளிட்ட பல நம்பகத்தன்மையான தகவல்களை திருட முடியும்.இதன் மூலம் கார்டுதாரருக்கு அதிக அளவில் பணம் இழப்பு ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. இந்த வகை வைரசை தனி நபர்கள் பரப்புவதாக சைபர் பாதுகாப்பு துப்பறியும் பிரிவு கண்டுபிடித்து அறிவித்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி