செய்திகள்,விளையாட்டு தொடரை வென்றது ஆஸ்திரேலியா…

தொடரை வென்றது ஆஸ்திரேலியா…

தொடரை வென்றது ஆஸ்திரேலியா… post thumbnail image
சிட்னி:-ஆஸ்திரேலியா–இங்கிலாந்து அணிகள் இடையிலான 3–வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நேற்று நடந்தது.‘டாஸ்: ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 243 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக இயான் மோர்கான் 54 ரன்னும், டிம் பிரிஸ்னன் (நாட்–அவுட்) 41 ரன்னும் எடுத்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் கவுல்டர் நிலே 3 விக்கெட்டும், கிறிஸ்டியன், பவுல்க்னெர் தலா 2 விக்கெட்டும், டோஹர்த்தி ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.பின்னர் 244 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஆஸ்திரேலிய அணி 40 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 244 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. ஆரோன் பிஞ்ச் 22 ரன்னிலும், டேவிட் வார்னர் 71 ரன்னிலும், கேப்டன் மைக்கேல் கிளார்க் 34 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். ஷான் மார்ஷ் 71 ரன்னுடனும், பிராட் ஹேடின் 37 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

இங்கிலாந்து அணி தரப்பில் ஜோர்டான், ரவிபோபரா, பென் ஸ்டோக்ஸ் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள். ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் ஆட்டநாயகன் விருது பெற்றார்.இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி ஒருநாள் போட்டி தொடரை 3–0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஏற்கனவே மெல்போர்னில் நடந்த முதலாவது ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்திலும், பிரிஸ்பேனில் நடந்த 2–வது ஆட்டத்தில் ஒரு விக்கெட் வித்தியாசத்திலும் ஆஸ்திரேலியா வென்று இருந்தது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி