செய்திகள்,திரையுலகம் சன்னி லியோனின் இடுப்பை கிள்ளிய ரசிகருக்கு தர்ம அடி…

சன்னி லியோனின் இடுப்பை கிள்ளிய ரசிகருக்கு தர்ம அடி…

சன்னி லியோனின் இடுப்பை கிள்ளிய ரசிகருக்கு தர்ம அடி… post thumbnail image
மும்பை:-பாலிவுட்டின் கவர்ச்சி நாயகி சன்னி லியோன் நடிக்கும் ராகினி எம்.எம்.எஸ்.2 படத்தின் படப்பிடிப்பு மும்பையில் உள்ள ஒரு பிலிம் சிட்டியில் கடந்த வாரம் நடந்தது.

நூற்றுக்கணக்கான துணைநடிகர்களுடன் சன்னிலியோன் கவர்ச்சி உடையில் ஆடிப்பாடுவது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. இவருடன் ஆட்டம் போட்டவர் பிரபல ராப் பாடகர் ஹனிசிங். இவர் பாலிவுட்டில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பெரும் புகழ்பெற்றவர்.முதல்நாளில் இவர்களுடைய படப்பிடிப்பு எவ்வித பிரச்சனையும் இன்றி நடந்து முடிந்தது. ஆனால் சன்னிலியோனின் கவர்ச்சி ஷூட்டிங் என்ற செய்தி பரவி, இரண்டாம் நாள் படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க பயங்கர கூட்டம் கூடியதால் படக்குழுவினர் திணறினர். மேலும் சன்னிலியோனின் கவர்ச்சி புகைபடத்தை மொபைல் போனில் எடுத்து உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தபடி ரசிர்கள் இருந்ததால் இயக்குனர் மிகவும் டென்ஷன் ஆனார்.

ஒருசில ரசிகர்கள் அத்துமீறி சன்னிலியோனிடம் ஆட்டோகிராப் வாங்குவதுபோல இடித்து உரசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சன்னிலியோனின் இடுப்பை கிள்ளிய ஒரு ரசிகர் படக்குழுவினரால் அடித்து விரட்டப்பட்டார்.
பின்னர் தனியார் பாதுகாப்பு படைக்கு தகவல் கொடுத்து வேடிக்கை பார்க்கும் அனைவரையும் அப்புறப்படுத்திவிட்டு, படத்தின் ஹீரோ முதல்கொண்டு அனைவருடைய செல்போனை சுவிட்ச் ஆப் செய்யுமாறு கேட்டுக்கொண்டு பின்னர்தான் படப்பிடிப்பு நடந்தது.

படப்பிடிப்பு குறித்து ஹனிசிங் கூறியபோது,நான் எத்தனையோ மேடைகளில் ஆடிப்பாடி இருந்தாலும், சன்னிலியோனுடன் ஆடியதை நான் ஒரு வித்தியாசமாக அனுபவமாக உணர்ந்தேன். உலகப்புகழ் பெற்ற நடிகையுடன் நடிப்பதில் நான் பெருமிதம் அடைகிறேன். என்று கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி