செய்திகள் கடற்கரையில் நிர்வாணமாகத் திரிந்த கப்பற்படை வீரர்கள்…

கடற்கரையில் நிர்வாணமாகத் திரிந்த கப்பற்படை வீரர்கள்…

கடற்கரையில் நிர்வாணமாகத் திரிந்த கப்பற்படை வீரர்கள்… post thumbnail image
கார்வார்:-இந்தியக் கப்பற்படையின் மிகப் பெரிய போர்க்கப்பலாகக் கருதப்படும் ‘ஐஎன்எஸ் விக்ரமாதித்யா‘ செவ்வாய்க்கிழமை கர்நாடகாவின் கார்வார் கடற்படை தளத்தை அடைந்தது.

ரஷ்யாவிலிருந்து பெறப்பட்ட இந்தக் கப்பலின் செயல்முறைகள் குறித்து இந்திய கப்பற்படை வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக 120 ரஷ்ய கப்பற்படை வீரர்கள் இதனுடன் இந்தியா வந்துள்ளனர்.இவர்களில் சிலர் நேற்று கடைத்தெருவிற்கு சென்றிருந்தனர். அங்கே சாலைகளில் மது அருந்தியபடியே இவர்கள் நடமாடிக் கொண்டிருந்தது பொதுமக்களை குறிப்பாக பெண்களை மிகவும் சங்கடப்படுத்தியது. அவர்களை சில பத்திரிகையாளர்கள் புகைப்படம் எடுத்தபோதும் அவர்கள் எதற்கென்று தெரியாமலே அதற்கு நன்றியும் கூறி அவர்களுடன் கை குலுக்கியுள்ளார்கள். இதுமட்டுமின்றி 50க்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் குழு ஒன்று அந்நகரின் கடற்கரையில் நேற்று நிர்வாணமாகக் குளித்துள்ளனர்.

நேற்று விடுமுறை தினமென்பதால் கடற்கரையில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. இவர்கள் நிர்வாணமாக அலைவதைக் கண்ட பெரும்பாலானோர் சங்கடமாக உணர்ந்தனர். அதன்பின் அங்கிருந்த காவல்துறையினர் நிர்வாணமாகக் குளிப்பது இங்கு அனுமதிக்கப்படுவதில்லை என்று விவரித்தபின் அவர்கள் உடனடியாக அங்கிருந்து கிளம்பினர்.அவர்களுக்கு ஆங்கிலம் புரியாததால் விதிமுறைகளை விளக்குவது சிரமமாக இருந்தது என்று காவல்துறையினர் தெரிவித்தனர். இது இவர்களது தவறாகாது. அவர்களை அழைத்து வந்த இந்தியக் கடற்படையினர் அவர்களிடம் நமது கலாச்சாரம் பற்றி தெளிவாக விளக்கியிருக்க வேண்டும் என்று அங்கிருந்த பிரேம் நாயக் என்ற கடை உரிமையாளர் கோபமுடன் கூறினார். அவரின் கருத்தையே தானும் ஆமோதிப்பதாக ஒய்வு பெற்ற ஆசிரியரான எம்.என்.நாயக் என்பவரும் தெரிவித்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி