திரையுலகம் நடிகரின் மரணத்தால் ரசிகன் தற்கொலை!..

நடிகரின் மரணத்தால் ரசிகன் தற்கொலை!..

நடிகரின் மரணத்தால் ரசிகன் தற்கொலை!.. post thumbnail image

பிரபல தெலுங்கு நடிகர் உதய்கிரண் கடந்த சில தினங்களுக்கு முன் தற்கொலை செய்துகொண்டார். அவரது மரணத்தின் துக்கம் தாங்க முடியாமல் மனமுடைந்த அவரது ரசிகரான ’19 வயதான சதீஷ்’ என்பவர் தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

விஜயநகரம் அருகேயுள்ள கொம்மட்டபள்ளி சந்திப்பிற்கு அருகே உள்ள மரத்தில் அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை மரத்திலிருந்து கீழே இறக்கினர். அப்போது அவரது சட்டைப்பையில் ஒரு கடிதம் இருந்தது.

அதில் உதயகிரண் தற்கொலை செய்துகொண்டதால் தானும் அம்முடிவை எடுத்தாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த கஜபதிபுரம் காவல்நிலைய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி