அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் இந்தியாவை வல்லரசாக்க ராகுல் காந்தியால் மட்டுமே முடியும்-மந்திரி பேச்சு…

இந்தியாவை வல்லரசாக்க ராகுல் காந்தியால் மட்டுமே முடியும்-மந்திரி பேச்சு…

இந்தியாவை வல்லரசாக்க ராகுல் காந்தியால் மட்டுமே முடியும்-மந்திரி பேச்சு… post thumbnail image
நாகர்கோவில்:-திங்கள்நகரில் தியாகியும், முன்னாள் மந்திரியுமான சிதம்பர நாடார் நூற்றாண்டு விழா நடைபெற்றது.விழாவுக்கு முன்னாள் எம்.எல்.ஏ. பாலையா தலைமை தாங்கினார். ஐ.என்.டி.யு.சி. மாநில பொதுச்செயலாளர் அனந்தகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.

முன்னாள் அமைச்சர்கள் சுரேஷ்ராஜன், லாரன்ஸ் மற்றும் ஹெலன் டேவிட்சன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ்,விஜயதரணி முன்னாள் எம்.எல்.ஏ., குமாரதாஸ், எப்.எம். ராஜரத்தினம், மதசார்பற்ற ஜனதா தள தலைவர் முகமது இஸ்மாயில், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சம்பத் சந்திரா, ஐ.என்.டி.யு.சி. மாவட்ட தலைவர் பொன். விஜயராகவன், புலவர் செல்லப்பா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.விழாவில் கேரள உள்துறை மந்திரி ரமேஷ் சென்னிதலா சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:–

காங்கிரஸ் கட்சியானது அனைத்து மக்களையும் ஒருங்கிணைந்து வழிநடத்தும் சமத்துவ கட்சியாகும். ஆனால் மற்ற கட்சிகள் மக்களை சாதி, இனம் என பிளவுபடுத்தி ஒற்றுமையை சீர்குலைக்கும் கட்சிகளாக உள்ளன. உலக நாடுகளில் இந்தியாவை வல்லரசாக மாற்ற ராகுல் காந்தியால் மட்டுமே முடியும். எனவே வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவோம்.அதற்கான பணியில் இறங்குவோம்.

கேரள காங்கிரசானது குமரி காங்கிரஸ் மீது மிகுந்த அக்கறையும், பாசமும் கொண்டுள்ளது. காங்கிரஸ் கட்சியினர் எந்தவித பாகுபாடும் இன்றி ஒருங்கிணைந்து செயல்பட்டால் வரும் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி