அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் சோனியா காந்திக்கு கோவில் கட்டும் எம்.எல்.ஏ…

சோனியா காந்திக்கு கோவில் கட்டும் எம்.எல்.ஏ…

சோனியா காந்திக்கு கோவில் கட்டும் எம்.எல்.ஏ… post thumbnail image
ஐதராபாத்:-ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. சங்கர்ராவ், ஐதராபாத்தில் கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு கோயில் கட்டுகிறார். இதற்காக 9 அடி உயரத்தில், அம்மன் உருவத்தில் சோனியா காந்தியின் வெண்கலச் சிலையை உருவாக்கியிருக்கிறார். தெலுங்கானாவின் தாயாக சோனியாவை சித்தரிக்கும் வகையில் இந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்ததற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த கோயிலை கட்டுவதாக சங்கர் ராவ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-தெலுங்கானாவில் சீமாந்திரா தலைவர்களின் ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டு வந்த சோனியா காந்திக்கு மக்கள் நன்றி தெரிவித்து அவரை வணங்கும் வகையில் கோயில் கட்ட முடிவு செய்துள்ளேன். இதற்காக எனக்கு சொந்தமான 9 ஏக்கர் நிலத்தை நன்கொடையாக வழங்கி, என் சொந்த பணத்தில் கட்ட உள்ளேன். பெங்களூர்-ஐதராபாத் நெடுஞ்சாலையில் இந்த கோயில் அமைய உள்ளது.

முகஸ்துதிக்காக இவ்வாறு செய்யவில்லை. நேரு மற்றும் காந்தி குடும்பத்திற்கு நான் விசுவாசியாக இருக்கிறேன். காங்கிரஸ் கட்சி எனக்கு 7 முறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்தது. 2 முறை அமைச்சராகவும் வந்துள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி