செய்திகள் இளவரசி மீது வரி மோசடி புகார்…

இளவரசி மீது வரி மோசடி புகார்…

இளவரசி மீது வரி மோசடி புகார்… post thumbnail image
மேட்ரிட்:-48 வயதான ஸ்பெயின் நாட்டு இளவரசி இன்பேண்டா கிறிஸ்டினா, தனது கணவர் இனாக்கி உர்டங்கரின் வியாபார நிறுவனங்களை கவனித்து வந்ததாக கூறப்படுகிறது. அவர் வியாபார நிறுவனங்களின் கணக்கு வழக்குகளில் தவறு செய்து வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

சென்ற வருடம் அறக்கட்டளைக்கு வழங்கப்பட்ட பெருமளவு நிதியை முறைகேடாக அபகரித்துக்கொண்டு இளவரசியின் கணவர் ஓடிவிட்டார். தனது கணவரின் நிறுவனமான அய்சூன் நிறுவனத்தில் இளவரசியும் பங்குதாரராக இருப்பதால் அவர் பால்மா டி மல்லோர்கா நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு நீதிபதி ஜோஸ் காஸ்ட்ரோ இன்று உத்தரவிட்டுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி