செய்திகள் பணத்துக்காக ‘நிர்வாண ரேஸ்’: 6 இளைஞர்கள் கைது…

பணத்துக்காக ‘நிர்வாண ரேஸ்’: 6 இளைஞர்கள் கைது…

பணத்துக்காக ‘நிர்வாண ரேஸ்’: 6 இளைஞர்கள் கைது… post thumbnail image
இஸ்லாமாபாத்:-லாகூரில் இருந்து 120 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பஞ்சாப் மாகாணம், கோராலி பகுதியை சேர்ந்த 6 வாலிபர்கள் பக்கத்தில் உள்ள நாட் கிராமம் வரை நேற்று மாலை நிர்வாணமாக ஓடுவது என்று பந்தயம் கட்டினர்.

நாட் கிராமத்தை யார் முதலில் சென்றடைகிறார்களோ..? அவர்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் பரிசு என அவர்களுக்குள் முடிவு செய்யப்பட்டது. பரிசு தொகையை வெல்லும் ஆர்வத்தில் அவர்கள் அனைவரும் ஆடைகளை களைந்துப் போட்டு விட்டு வீதிகள் வழியாக நிர்வாண கோலத்தில் தலை தெறிக்க ஓடினர்.

இதனை கண்ட அப்பகுதி பெரியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்களில் சிலர் கோராலி போலீசாருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த போலீசார் அவர்கள் அனைவரையும் நிர்வாண நிலையிலேயே கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று, வழக்குப் பதிவு செய்தனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி