செய்திகள்,முதன்மை செய்திகள் காலேஜ் “பெண்களா” நீங்கள் இதோ!!!

காலேஜ் “பெண்களா” நீங்கள் இதோ!!!

காலேஜ் “பெண்களா” நீங்கள்  இதோ!!! post thumbnail image
கண்கள் தான் மனசைப் பிரதிபலிக்கிற கண்ணாடி. நம்ம மனசுக்குள்ள சந்தோஷமோ, சோகமோ, எது இருந்தாலும், அது கண்களில் தான் தெரியும். என்னதான் பிரமாதமா மேக்கப் போட்டாலும் கண்களுக்கு மேக்கப் இல்லைனா அந்த அழகு கொஞ்சங்கூட எடுபடாது.

வெறுமனே மையும், ஐ லைனரும் மட்டுமே கண்களுக்கு போதும்னு நினைக்குறதில்லை இன்றைய இளம் பெண்கள். சாதாரண காஜல்னு ஆரம்பிச்சு, மஸ்காரா வரைக்கும் எல்லாத்துலயும் புதுமைகள் வந்தாச்சு. உங்கள் அழகை எடுத்துக் காட்ட தினமும் கிளென்சர், டோனர், மாயிச்சரைசர், உபயோகிக்கணும்.

அதன் பிறகு ஃபவுண்டேஷன் போடணும். கண்களுக்கடியில் கருவளையம் அதிகமிருக்கிறவங்க கண்சீலர் உபயோகிச்சு அதை மறைக்கலாம். அதுக்கு மேலே மேக்கப் போட்டா கருவளையம் தெரியாது. வேலைக்கு போறவங்களும், காலேஜ் பொண்ணுங்களும் நேச்சுரல் ஷேடு ஐ மேக்கப் சாதனங்களை செலக்ட் பண்ணலாம். லைட் பிரவுன் கலர் லைனரால கண்களோட ஒரங்கள்ல வரைஞ்சுக்கலாம்.

பிங்க் அல்லது பேபி பிங்க் நிற ஐ ஷேடோ பெஸ்ட். பார்ட்டி போகும் போது கிளிட்டர்னு சொல்ற பளபளக்கிற ஐ ஷேடோ உபயோகிக்கலாம். லென்ஸ் உபயோகிக்கிறவங்க, மேக்கப் போடறதுக்கு முன்னாடியே லென்ஸ் போட்டுக்கணும்.

பாதாம் ஆயில் அல்லது விளக்கெண்ணெய் தடவினா கண் இமைகள் அடர்த்தியா வளரும். சுத்தமான பன்னீரை கண்களுக்குள்ள ஒவ்வொரு சொட்டு விட்டா அழுக்குகள் நீங்கி கண்கள் சுத்தமாகும். எந்தக் காரணம் கொண்டும் கண்களில் போட்ட மேக்கப்பை கலைக்காமல் தூங்கவே கூடாது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி