செய்திகள்,முதன்மை செய்திகள் விடுதியில் “மாணவர்” தற்கொலை!!!

விடுதியில் “மாணவர்” தற்கொலை!!!

விடுதியில் “மாணவர்” தற்கொலை!!! post thumbnail image
அலங்காநல்லூரை சேர்ந்த சீனிவாசனின் மகன் “வெங்கடேஷ்” வயது 17. இவர் நாமக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் +2 படித்து வருகிறார். அவர் பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்தார். சமீபத்தில் நடந்த தேர்வில் மதிப்பெண் குறைவாக வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவனை அவனது தந்தை திட்டினார்.

பள்ளி விடுதியில் இன்று காலை 5 மணிக்கு மாணவர்கள் அனைவரும் படித்து கொண்டு இருந்தனர். அப்போது படிக்க வந்த மாணவன் “வெங்கடேஷ்” கழிவறை சென்று வருவதாக கூறி விட்டு சென்றான். திரும்ப வரவில்லை.

மாணவன் வெங்கடேஷ் கயிறால் தூக்கு போட்டு உள்ளான். அப்போது கயிறு கழுத்தில் இறுக்கியும், அந்த கயிறு அறுந்து விழுந்தும் இறந்துவிட்டான். வெங்கடேஷ் இறந்து கிடப்பதை பார்த்த மற்றொரு மாணவன் (சசிக்குமார்) மயங்கி விழுந்தார். அவன் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறான்.

இந்த சம்பவம் குறித்து நாமக்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். தற்கொலை செய்த மாணவனின் பெற்றோருக்கும் தகவல் கொடுக்கப்பட்டு உள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி