அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் மீண்டும் பிரதமராகமாட்டேன்… பிரதமர் பேட்டி…

மீண்டும் பிரதமராகமாட்டேன்… பிரதமர் பேட்டி…

மீண்டும் பிரதமராகமாட்டேன்… பிரதமர் பேட்டி… post thumbnail image
புதுடெல்லி:- பிரதமர் மன்மோகன்சிங் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-மத்திய அரசு 9 ஆண்டுகளில் பல சாதனைகளை செய்துள்ளது. பட்டினி, ஊழலை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. உணவு பாதுகாப்பு மசோதா அனைவருக்கும் உணவு கிடைக்க வழி செய்துள்ளது. பொருளாதார வீழ்ச்சியை தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

கிராமப்புற வளர்ச்சி தொடர்பான வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது. வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்கள் எண்ணிக்கை 13.8 கோடியாக குறைந்துள்ளது. கல்வியை மேம்படுத்த பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பல்வேறு துறையில் உற்பத்தி குறிப்பிடத்தக்க அளவு உயர்ந்துள்ளது.

மத்திய அரசின் 2-வது ஆட்சியில் விவசாயத்துறை முன்னேற்றம் அடைந்துள்ளது. மீண்டும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைத்தால் 3-வது முறையாக பிரதமராகமாட்டேன்.இவ்வாறு அவர் கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி