செய்திகள்,முதன்மை செய்திகள் ஈவ்டிசிங் செய்த வாலிபர்கள் கைது …

ஈவ்டிசிங் செய்த வாலிபர்கள் கைது …

ஈவ்டிசிங் செய்த வாலிபர்கள் கைது … post thumbnail image
“கயத்தாறு” அருகே உள்ள “வில்லிச்சேரி” கிராமத்தை சேர்ந்த பிளஸ்–2 மாணவிகள் 6 பேர் கோவில்பட்டிக்கு டியூசனுக்கு சென்று வருகிறார்கள். அவர்கள் 6 பேரும் கோவில்பட்டிக்கு பஸ்சில் சென்றுவந்தனர்.

நேற்றும் அவர்கள் டியூசனுக்கு சென்று விட்டு வில்லிச்சேரிக்கு திரும்பி வந்தனர். வில்லிச்சேரி விலக்கில் இறங்கி தங்களது ஊருக்கு 6 மாணவிகளும் நடந்து வந்தனர்.அப்போது வில்லிச்சேரியை சேர்ந்த முத்துராஜ் (வயது 25), மகாராஜன் (23), கருப்பசாமி (23), இடைச்செவலை சேர்ந்த பாலமுருகன் (23) ஆகிய 4 வாலிபர்களும் மாணவிகளை கிண்டல் செய்தனர். இது குறித்து மாணவிகள் தங்களின் பெற்றோரிடம் தெரிவித்தனர்.

அவர்கள் கிண்டல் செய்த வாலிபர்கள் மீது கயத்தாறு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் முத்து வழக்குப்பதிந்து மாணவிகளை கிண்டல் செய்த 4 வாலிபர்களையும் கைது செய்தனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி